Thursday, October 4, 2012

தமிழ் வளர்ச்சியில் கணினித்தமிழ்


தமிழ் வளர்ச்சியில் கணினித்தமிழ்
( பேரா. ந. தெய்வ சுந்தரம்)

தமிழ்மொழியின் சிறப்புப்பற்றி அனைவரும் அறிவோம்உலகின் தொன்மையான மொழிகளின் பட்டியலில் முன்வரிசையில் இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டுதொன்மையான மொழிகள் சில தங்களதுவரலாற்று வளர்ச்சியில்தொடர்ச்சியின்றி வழக்கிழந்துள்ளனஆனால் தமிழ்மொழியோ மக்கள் மொழியாகத் தொடர்ந்து வாழ்ந்தும் வளர்ந்தும் வருகிறது.

இலக்கியச் செழுமையிலும் இலக்கண வளத்திலும் முன்னணியில் நிற்பது தமிழ் மொழிஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தமிழின் இலக்கியங்களும் இலக்கணங்களும் வளர்ச்சியடைந்து வருகின்றனஇன்றைய மொழி ஆய்வாளர்கள்வியக்கத்தக்கவகையில்பழந்தமிழ் இலக்கண நூல்களும் உரையாசிரியர்களின்  உரைகளும் அமைந்துள்ளன.தொல்காப்பியத்தின் அமைப்பும் இலக்கணக் கோட்பாடுகளும்அதனடிப்படையில்அமைந்துள்ள  தமிழ் அமைப்பு விளக்கங்களும் வாய்பாடுகளும் இன்றைய மொழியியலின் பல்வேறு கோட்பாடுகளை உள்ளடக்கி நிற்கின்றன என்றால் அதுமிகையாது.    

இவ்வாறாகதொன்மைவரலாற்றுத்தொடர்ச்சிஇலக்கிய வளம் ,இலக்கணச் செல்வம் என்று தமிழின் சிறப்புகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

இவ்வாறு சீரும் சிறப்பும் பெற்ற தமிழ்மொழிஇந்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகும் தகுதியை இன்றுவரை பெறவில்லை.இந்திய நாட்டின் மக்கள்தொகை 122 கோடி என்று சொல்கிறார்கள்.இதில் தமிழ்நாட்டுத் தமிழர் தொகை 7.2 கோடி என்பர்மற்ற அண்டைய மாநிலங்களில் இருக்கும் தமிழர் தொகை 2 கோடியைத் தொடும். ஆனால், இவர்கள் தமிழை ஆட்சிமொழியாகப் பெறும் வாய்ப்பை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் வாழும் தமிழர் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும். மொத்தத்தில் கிட்டத்தட்ட 10 கோடி மக்கள் உலகத்தில் தமிழோடு தொடர்புடையவர்கள் ஆவர். ஆனால் இந்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகத் தமிழ் இன்றுவரை ஆக்கப்படவில்லை.இந்தியமொழிகள்பற்றிய நடுவண் அரசின் விவர அட்டவணைப்படி,இந்தோ - ஆரியமொழிககுடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் அனைத்தையும் பேசுகிற மக்கள் 76.86 விழுக்காடு என்றால்,திராவிடமொழிகள் பேசுகிற மக்கள் 20.82 விழுக்காடு ஆகும்ஐந்தில் ஒரு பங்கு மக்கள் பேசும் திராவிடமொழிகள் எதுவுமே இந்திய அரசின் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படவில்லைஇது மிகவும் வருந்தத்தக்க ஒரு நிலையாகும்.

அரசியல் சட்டம் மூலம் இந்தி மொழி ஆட்சிமொழியாக (இந்தியாவில் தேசிய மொழி என்று ஒன்று இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும் ) ஆக்கப்பட்டுள்ள  நிலையில்,அம்மொழியை இந்தியக்கூட்டரசில்இடம்பெற்றுள்ளஇந்திமொழிபேசாத இனத்தினரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே இந்திய நடுவண் அரசின் கொள்கைஇந்திய அரசியல் சட்டத்தில் 8-ஆவது அட்டவணையில் முதலில் 18 மொழிகள் இடம்பெற்றிருந்தன.தற்போது 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டவணையின் நோக்கம் பற்றி அரசியல் சட்டத்தில் ( பிரிவு 344(1), 351) தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்திமொழியை ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைக்கப்படும் ஆட்சிமொழி ஆணையத்தில் இந்த 22 மொழிகள் பேசுவோருக்கும் இடம் உண்டு. மேலும் இந்தி மொழியானது இந்த அட்டவணையில் உள்ள மொழிகளிலிருந்து தேவையானவற்றைப் பெற்றுத் தன்னை மேலும் வளர்த்துக்கொள்ளவேண்டும். மற்றபடி இந்த அட்டவணை மொழிகளுக்குரிய உரிமைகள் பற்றி எந்தக் குறிப்பும் அரசியல் சட்டத்தில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திமொழிஆட்சிமொழி என்பதைஇந்திபேசாதமாநிலங்களைச்சேர்ந்தவர்கள் ஏற்க மறுக்கிற நிலையில்அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளும்வரை ஆங்கிலம்இணைப்புமொழியாக நீடிக்கும் என்ற ஓர் உறுதிமொழியும் வழங்கப்பட்டுள்ளதுஆனால் இறுதியில்இந்திமொழியைமட்டுமே ஆட்சிமொழியாக இந்நாட்டின் மக்கள் அனைவரையும்  ஏற்றுக்கொள்ளவைப்பதே இந்திய அரசின்அடிப்படையாகத் தெரிகிறது..

இந்திமொழிஆட்சிமொழி என்ற தகுதி பெற்றிருப்பதால்இந்திய அரசின் அனைத்துப் பணிகளிலும் இந்தியைப் பயன்படுத்தும் நிலையை உருவாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய நடுவண் அரசு மேற்கொண்டுவருகிறதுஅதற்காக ஒரு தனித்துறையே அரசால் உருவாக்கப்பட்டுள்ளதுஆங்கிலம் இணைப்பு மொழியாகப் பயன்படுத்தத் தற்போது அனுமதிக்கப்பட்டாலும்,இந்திமொழியைமுழுமையான ஆட்சிமொழியாக அனைவரும் பயன்படுத்தத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் இந்திய அரசு தொடர்ந்து எடுத்துவருகிறது.

இன்றைய கணினி காலத்தில் அரசு நிறுவனங்களும் மக்களும் தகவல் பரிமாற்றத்திற்குக் கணினியையே பயன்படுத்திவருவதால்,இந்திமொழியைக்கணினியில் பயன்படுத்துவதற்கான அனைத்து வசதிகளையும் உருவாக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறதுஇதுபற்றிய நடுவண் அரசின் கீழ்க்கண்ட குறிப்பைக் காணலாம்.

Technical
In order to facilitate the use of Official Language with the help of Mechanical and Electronic equipment, especially computers, a Technical Cell was set up in the Department of Official Language in October 1983. The main activities of the Cell are as under:
·        Development of "Language application tools" - Under this programme LILA Rajbhasha, a self-learning package through the medium of Bangla, English, Kannada, Malayalam, Tamil and Telugu has been developed, MANTRA Rajbhasha, an aid tool for English to Hindi translation has also been developed
·        Organising computer training programmes in Hindi - Every year around 100 training programmes are conducted to impart training for the use of Hindi on computers
·        Organising exhibitions and seminars on bilingual computing - Technical seminars are held to help the users and manufacturers come face to face to discuss the use of Hindi software, etc.
The Department of Official Language has now set up its portal www.rajbhasha.gov.in(External website that opens in a new window).     - http://india.gov.in/knowindia/profile.php?id=33
    
மேற்கண்ட குறிப்பில் அடங்கியுள்ள நோக்கங்களைப் பார்த்தால்,இந்திமொழியைமட்டுமே முழுமையான ஆட்சிமொழியாகக் கொண்டுவருவதில் நடுவண் அரசு காட்டும் முனைப்புத் தெளிவாகும்.
1. இந்தியைப் பிற மொழிகள் பேசும் மக்கள் அனைவரும் கணினிவழி கற்றுக்கொள்வதற்கான மென்பொருள்களை உருவாக்குதல்
2. இந்திமொழிபேசாத மக்கள் ஆங்கிலத்தில் அளிக்கும் தகவல்களை இந்தியில் மொழிபெயர்த்துத் தரும் கணினிவழி மொழிபெயர்ப்பு மென்பொருள்களை உருவாக்குதல்
3. கணினியில் இந்தியைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி அளித்தல்
4. இந்தி மென்பொருள்களைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கருத்தரங்குகளையும்,கண்காட்சிகளையும் ஏற்பாடு செய்தல்

மேற்கூறிய நோக்கங்களுக்காக நடுவண் அரசின்தகவல்தொழில்நுட்பத்துறைஉட்பட அனைத்துத் துறைகளிலும்  பல கோடி ஒதுக்கப்பட்டுபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தி பேசாததெரியாத  மக்களும் இந்திவழியேதான் நடுவண் அரசுடன் தொடர்புகொள்ளவேண்டும் என்பது நடுவண் அரசின் கொள்கையாக இருக்கிறதுஅதற்கு என்ன செய்வதுஒன்று அவர்கள் இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும்மற்றொன்று அவர்கள் தங்கள் மொழிகளில் தகவல் அனுப்பினாலும் அது இந்தியில்(தான்)மொழிபெயர்க்கப்பட்டு , நடுவண் அரசின் கோப்புகளில் இடம்பெறவேண்டும்அதற்கான மொழிபெயர்ப்பு மென்பொருள்களை உருவாக்கவேண்டும்எப்படியும் இந்திமொழிஒன்றே இந்திய அரசின் ஆட்சிமொழி என்பது உறுதியாக்கப்படவேண்டும்இதுதான் இந்திய அரசின் கொள்கை.

இந்தியிலிருந்து பிறமொழிக்கும், பிறமொழியிலிருந்து இந்திக்குமான மென்பொருள்களை உருவாக்கும் நோக்கத்திற்காகஇந்திமொழியைஅடிப்படையாகக் கொண்டபல்வேறு மென்பொருள்களை உருவாக்க ஆய்வுப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதனால் பிறமொழிகளுக்கும் கணினியில் வளர்வதற்கான வழிகள் இருக்கிறதே என்று எண்ணலாம்அடிமை உயிருடன் இருந்தால்தான் ஆண்டை அடிமையின் உழைப்பில் வாழமுடியும்அதற்காக அடிமைக்குச் சோறு அளிக்கிறான்அதைப் பாராட்டுவதா அல்லது ஆண்டை - அடிமை முறையை ஒழிப்பதா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

இந்தியை மட்டுமே ஆட்சிமொழியாக்குவதற்கான முயற்சியே மேற்கூறியதாகும்பிறமொழிகளின்மீதுஇந்திமொழியின்ஆதிக்கத்தைத் திணிப்பதே நடுவணரசின் நோக்கம்இந்தியாவின் பிறமொழிகளையும் ஆட்சிமொழிகளாக அறிவித்துஅதன்பிறகு மேற்கூறிய கணினிவழிமொழிப்பயன்படுத்தத்திற்கானமொழித்தொழில்நுட்பத்தை வளர்த்தால் அதை வரவேற்கலாம்.

ஆனால் மேற்கூறிய நடவடிக்கையானதுஇந்திமொழியின்ஆதிக்கத்தை நிலைநாட்டவே மேற்கொள்ளப்படுகிறது.

இத்ற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறலாம்இந்தியமொழிகளுக்கானமொழிபெயர்ப்புமென்பொருள் உருவாக்குவதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்திட்டத்தின்படிஇந்திமொழியின்சில ஆயிரம் சொற்களைத் திரட்டிஅவற்றிற்கு இணையானபிறமொழிச்சொற்களைக்கொண்டஒரு மின்னகராதிஉருவாக்கப்படுகிறதுஇந்திமொழித்தொடர்களின் அமைப்புகளுக்கு இணையான பிறமொழித் தொடர்களைக்கொண்ட ஒரு தரவுத்தளம் உருவாக்கப்படுகிறதுஇவையெல்லாம் .இந்திமொழியைஅடிப்படை மொழியாகக் கொள்ளப்படுவதற்கே!

மேற்கூறிய கணினிவழி மொழித்தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தியை ஆட்சிமொழியாக நிலைநிறுத்தும் முயற்சிக்குப் பல பல்கலைக்கழகங்களிலும்இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களிலும் (ஐஐடி-க்களில் ) மொழித்தொழில்நுட்பத்துறைகள்உருவாக்கப்பட்டுள்ளனபல நூறு கோடிப் பணச்செலவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றனஉலகின் தலைசிறந்த மொழித்தொழில்நுட்ப வல்லுநர்களையெல்லாம் வரவழைத்து,இதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மறைமுகமாக இன்னொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.கணினிவழி மொழித்தொழில்நுட்பத்தைஇந்தியமொழிகளுக்குச்செயல்படுத்தும் முயற்சியில் , கணினியில் இடைமொழியாகப்பயன்படுத்த  வடமொழியான சமற்கிருதமே ஏற்றது என்ற கருத்துருவும், “ சமற்கிருத மொழிக்கானபாணினியம்என்ற இலக்கண நூலே கணினிமொழியியலுக்கு அடிப்படையாக அமைவதற்கு ஏற்றது”என்ற கருத்துருவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்திசமற்கிருதம் ஆகிய இரண்டின் ஆதிக்கத்தைப் பிறமொழிகளின்மீது திணிக்கப் பலவகைகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்தச் சூழலில் நம் தாய்மொழியான தமிழின் நிலை என்னஅதன் வளர்ச்சிக்கு நாம் செய்யவேண்டியது என்ன ?

நமது முதல் கோரிக்கை - தமிழ் உட்பட அனைத்துஇந்தியமொழிகளும் இந்திய அரசின் ஆட்சிமொழிகளாகும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

இதனால்மட்டுமேஇந்திமொழியின்ஆதிக்கத்தை முழுமையாகத் தடுக்கமுடியும்இதற்காகப் பிறமொழியினரோடு இணைந்து,தேவையான நடவடிக்கைகளில் தமிழ் மக்கள் ஈடுபடவேண்டும்.தமிழக அரசும் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

அடுத்துகணினிவழி மொழித்தொழில்நுட்பத்தைஇந்தியமொழிகளுக்குச்செயற்படுத்திஇந்திமொழியைஅடிப்படையாகக்கொண்டு இந்தியமொழிகள்அனைத்துக்கும் தேவையான மொழிசார்ந்த மென்பொருள்களை உருவாக்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு  கைவிடவேண்டும்அனைத்துஇந்திய மொழிகளும் சமம் என்ற  நிலையில் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
   
தமிழகத்தில் நமது கடமை :

ஒரு மொழியைத் திட்டமிட்டு வளர்த்தெடுக்கும் முயற்சி இன்று பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவருகிறதுவழக்கிழந்தஈப்ருமொழியையேவழக்குமொழியாக்கத் திட்டமிட்டு இசரேல்வளர்த்தெடுத்துள்ளதுவடமொழியான சமற்கிருதத்தை மக்களின் பேச்சுமொழியாக்கும் முயற்சியில் பல்வேறு அமைப்புகள் நடுவண் அரசின் துணையுடன் செயற்பட்டுவருகின்றன.

இந்தோனேசியாவில் அவர்களுடைய தாய்மொழியை அறிவியலுக்கும் ஏற்ற  மொழியாக வளர்த்துள்ளார்கள்இதுபோன்ற மொழிவளர்ச்சித் திட்டங்கள் என்பது சீனாசப்பான்அயர்லாந்துதென் ஆப்பிரிக்கா போன்றபலநாடுகளிலும்செயற்படுத்தப்பட்டுவருகிறது.

மொழிவளர்ச்சித் திட்டத்தில் முதன்மையான பணிகுறிப்பிட்ட மொழிக்குரிய தகுதியை அந்த மொழியைப் பேசும் சமுதாயம் அளிப்பதேயாகும்ஆட்சிமொழி,, பயிற்றுமொழிவழிபாட்டுமொழி ,ஊடகமொழிவணிகமொழி , இலக்கியமொழிஎன்று பல வகைத் தகுதிகளை  ஒரு மொழிக்கு அளிப்பது முதன்மைப் பணியாகும்.

இந்திய அரசின் ஆட்சிமொழித்தகுதி தமிழ்மொழிக்கு அளிக்கப்படவில்லை என்பதை இவ்விடத்தில் மீண்டும் குறிப்பிடவேண்டும்.

தமிழ் நாட்டு அரசின் ஆட்சிமொழி என்ற தகுதியானது ,தமிழ்மொழிக்கு  1956 ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றப் பேரவையில் ஒருமனதான தீர்மானத்தின்வழி 1957 சனவரி 23 ஆம் நாளன்று தமிழக அரசாணையாக அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டரசின் அலுவலகப் பணிகள் அனைத்தும் தமிழில் மேற்கொள்வதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஆனால் நடைமுறைப்படுத்துவதில் பெருங்குறைகள் உள்ளன. அரசின் தலைமைச் செயலக நடைமுறைகள் இன்னும் ஆங்கிலத்திலேயே உள்ளன. மக்கள்நிலை அரசுத் தொடர்புகள் ஓரளவுதான் தமிழில் உள்ளன.

நீதிமன்ற மொழியாக இன்னும் தமிழ்மொழி முழுமையாக ஆக்கப்படவில்லைஉயர்நீதிமன்றத்தின் மொழி என்ற தகுதி இன்னும் தமிழுக்கு அளிக்கப்படவில்லைஅது அளிக்கப்படுவதற்கான முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும்.

கல்விநிலையங்களில் பயிற்றுமொழியாக ஆங்கிலமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறதுஅரசுப் பள்ளிகளில்கூட ஆங்கிலம் பயிற்று மொழி என்ற நிலை உள்நுழையத் தலைப்படுகிறது. தனியார்ப் பள்ளிகளில் ஆங்கிலமே பயிற்றுமொழியாக இருக்கிறது. 1960களில் தமிழ்நாடெங்கும் 13 பள்ளிகளில் மட்டுமே ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருந்தது. இன்றோ 5000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருக்கிறது. உயர்நிலை,ஆய்வுப் படிப்புகளில் பல காரணங்கள் கூறப்பட்டுதமிழ் புறக்கணிக்கப்படுகிறதுகலைச்சொல் இல்லைபாடப்புத்தகங்கள் இல்லைஅயல்நாடுகளுக்குப் பணிக்குச் செல்பவர்களுக்குச் சிக்கல் என்றெல்லாம் வெவ்வேறு வகையிற் கூறிதமிழ் புறக்கணிக்கப்படுகிறதுமுன்னே சொன்னதுபோல் தனியார் பள்ளிகள்பெரும்பாலானவற்றில்ஆங்கிலமே பயிற்றுமொழியாக இருந்துவருகிறது.

தமிழகக் கோயில்களில் வடமொழியே வழிபாட்டுமொழியாக நடைமுறையில் இருந்துவருகிறதுதமிழ்நாட்டரசின் தலையீட்டின் பயனாக,  " தமிழும் வழிபாட்டுமொழியாக இருக்கலாம் " என்ற ஒரு நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

வணிகமொழியாக இன்றும் ஆங்கிலமே ஆளுமை செலுத்தி வருகிறதுதமிழகத்தில் எந்தக் கடையிலும் கணியச்சின் வழியே கொடுக்கப்படும் பட்டிகளும், பற்றுச் சீட்டுக்களும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. எல்லாத் தனியார் கடையும் தங்களின் வாங்குமானம், விற்றுமானம், பகிர்மானம், விற்பாணைப் பெறுமானங்கள் போன்றவற்றை ஆங்கிலத்தின் வழியேதான் செய்கின்றன. அரசு பெறுகின்ற விற்பனை வரித்தொடர்பான ஆவணங்களும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. எல்லாப் பொருள்களின் செயற்பாட்டுக் கையேடுகளும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. மொத்தத்தில் வணிகத்துறையில் ஆங்கிலமே ஆளுமை செய்கிறது; தமிழுக்கு அங்கு இடமில்லை. அப்பொழுது தமிழ்வழிப் படித்தோருக்கு வேலை வாய்ப்பு இல்லையென்று ஆகிறது. தமிழ்நாட்டரசின் தலையீட்டின் பயனாகவும்,சில அதிகாரிகளின் முயற்சிகளினாலும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் மட்டும் தமிழ் இடம் பெற்றுள்ளது.தமிழ் வளர்ச்சிக்குச் செய்யவேண்டிய பணிகளில் இது ஒரு விழுக்காடுகூடக் காணாது.

ஊடகங்களில் , குறிப்பாக வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் ஆங்கிலம் கலந்த தமிழே முற்றிலும் பயன்படுத்தப்பட்டுவருகிறதுஇதன் பயனாக இதைப் பார்க்கும் தமிழ்க் குடும்பங்களில்கூடவீட்டில் பேசப்படும் தகுதியைத் தமிழ் இழந்து வருகிறது என்பது ஒரு கசப்பான உண்மை.தமிழே புழங்காது தமிழர் தம் சமுதாயத்தை நடத்திக்கொண்டிருக்கும் நிலை வெட்கக்கேடானது என்பதை உணரவேண்டும்.

மேற்குறிப்பிட்ட தகுதிகள் அனைத்தும் தமிழ்மொழிக்கு முழுமையாக அளிக்கப்படத் தேவையான பணிகளை மேற்கொள்வது தமிழர்களின் தலையாயக் கடமையாகும்இதுவே தமிழ்நாட்டரசின் மொழிக்கொள்கையாகவும் அமையவேண்டும்.

அடுத்த கட்டமாகமேற்கூறிய தகுதிகளைப் பெறுகிற தமிழ்மொழியானது அதற்குரிய பணிகள் அனைத்தையும் மேற்கொள்ளும் வலிமை பெறுவதாகும்இதற்குத் திட்டமிட்டு தமிழ்மொழி வளர்ச்சியை மேற்கொள்ளவேண்டும்..கலைச்சொல்லாக்கம் , அறிவியல் நூலாக்கம் , ஊடகக்கருத்தாடல்உள்ளிட்ட அனைத்து கருத்தாடல்களையும் தமிழில் மேற்கொள்வதற்கான பணிகள் போன்றவை இதில் அடங்கும்

இன்றையமின்னணுக் காலத்தில்மேற்கூறிய பணிகள் அனைத்திலுமே கணினி போன்ற மின்னணுக்கருவிகள் அல்லது மின்னணு ஊடகங்கள்  முதன்மை பெற்றுள்ளன. ஒரு கருத்தையோ தகவலையோ உருவாக்கவும்பெறவும் , அதைப் பரிமாற்றம் செய்யவும் மொழியே அடிப்படைஇன்று இப் பணிகள் அனைத்தும் அலைபேசிகணினி போன்ற மின்னணுக்கருவிகள் வழியே மேற்கொள்ளப் படுகின்றனஇக்கருவிகளின்  வளர்ச்சிகாரணமாக இடம்காலம் போன்றவற்றில் தடையில்லை.  

எனவே கணினிஅலைபேசி போன்ற மின்னணு ஊடகங்களில் தமிழ்மொழி முழுமையாக இடம்பெறுவது கட்டாயமாகிறது.கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்புப்பட்டயம் ஆகியவற்றிலிருந்து தாளுக்கு வந்த தமிழ்,கணினித்தமிழ்என்ற ஒரு புதிய வகைப்பாட்டிலும் மேன்மை பெறவேண்டும்அம் மேன்மையை அடைவதைத் தடுக்கும் தடைகளையும், முட்டுப்பாடுகளையும் தகர்க்கவேண்டும்.

இன்றைய உலகமயவயமாக்கச் சூழலில் ஒரு மொழி மின்னணு ஊடகங்களுக்கு ஏற்ற மொழியாகத் தன்னை அமைத்துக்கொள்ளவில்லையென்றால் அது பயன்பாட்டில் தன் வலிமையை இழந்து  வழக்கிழந்தமொழியாகக்கூட மாறிவிடும்.

மின் ஆளுகை , மின்கல்வி , மின்வணிகம்என்று பல துறைகளிலும் தமிழ்மொழி வளர்ந்து நிற்கவேண்டும்இந்நிலை நாம் விரும்புவதால் மட்டுமே தானாக ஏற்பட்டுவிடாதுதிட்டமிட்டுப் பணியாற்றினால்தான் இது நிறைவேறும்.

இந்திமொழியைஇந்த நிலைக்கு உயர்த்த இந்திய  அரசு மேற்கொள்ளும் முயற்சிகள்பற்றியும்,  வடமொழியான சமற்கிருதத்தின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் முன்னரே கண்டோம்சவகர்லால் நடுவண் பல்கலைக்கழகம் போன்றவற்றில் சமற்கிருத கணினிமொழியியல் துறைகள் அமைக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.    

கணினித்தமிழின்இன்றையவளர்ச்சிநிலை:

சில ஆண்டுகளுக்கு முன்வரைதமிழ் எழுத்துருக்களையே கணினியில் காணமுடியாத நிலை இருந்ததுஇன்று அந்நிலை மாறிவிட்டதுஇருப்பினும் சில பன்னாட்டு நிறுவனங்களின் மென்பொருள்களில் ( இன்டிசைன் , கோரல்டிராவ்  போன்றவற்றில் அண்மையில் தமிழுக்கு உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்தமிழுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லைஇதனால் தமிழ்அச்சீட்டாளர்களுக்குப்பல சிக்கல்கள் நீடிக்கின்றன.

ஒருங்குறிசேர்த்தியத்தில்தமிழ் எழுத்துகளுக்குத் தேவையான இடங்கள் முழுமையாக அளிக்கப்படவில்லைஅதற்குக் காரணம்,வடமொழிகளின்எழுத்துசார்ந்துபிறஇந்திய மொழிகளுக்கும்இடம் அளிக்குமாறு ஒருங்குறி சேர்த்தியத்திடம்தெரிவித்தஇந்திய அரசின்நிலைப்பாடேயாகும்இதனால் இன்று தமிழுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சிக்கலைத் தீர்க்கத் தமிழ்நாடு அரசு முனைந்து செயற்படவேண்டும்.

கணினித்தமிழ்வளர்ச்சி என்பது தமிழ் எழுத்துருக்கள்,விசைப்பலகையோடு நின்றுவிடக்கூடியதல்ல.  நடைமுறைக்குத் தேவையானஅனைத்துமென்பொருள்களும் தமிழில் உருவாக்கப்படவேண்டும்சொல்லாளர் , ஒளிவழி எழுத்துணரி,பேச்சு-எழுத்துமாற்றிஎழுத்து-பேச்சுமாற்றிஇயந்திரமொழிபெயர்ப்புபோன்ற மென்பொருள்களை உருவாக்கவேண்டும்.

கணினிவழி என்னென்ன பணிகளை மேற்கொள்கிறோமோ,அத்தனைப் பணிகளுக்கும் தேவையான மென்பொருள்களைத் தமிழில் உருவாக்கவேண்டும்பார்வைக் குறையுடையவர்கள் யாருடைய துணையும் இன்றிகணினி முன் அமர்ந்துஇணையதளத்தைப் பார்வையிடமுடியும்மின்னஞ்சல்களை ஆங்கிலத்தில் அனுப்ப முடியும்அவர்களுக்கு உதவும்வகையில் தேவையான மென்பொருள்களைத் தமிழிலும் உருவாக்கவேண்டும்.

பேச்சு - எழுத்துமாற்றிமென்பொருள் தமிழுக்கு உருவாக்கப்பட்டால்,அவர்கள் பேசுவதைக் கணினியில் எழுத்துகளில் வடிக்கமுடியும்.இதுபோன்ற எத்தனையோ பயன்பாட்டு மென்பொருள்களைத் தமிழுக்கு உருவாக்கவேண்டும்அப்போதுதான் தமிழ் அனைத்துச்செயற்பாடுகளுக்கும்பயன்படக்கூடிய மொழி என்கிற வளர்ச்சியை எட்டும்.

தமிழைஅடிப்படையாகக்கொண்டுதமிழ் - பிறமொழிகள் மொழிபெயர்ப்பு மென்பொருள்களை உருவாக்கவேண்டும்.தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கண நூல்களிலுள்ள நெறிகளின் அடிப்படையில் பல மென்பொருள்களை உருவாக்கலாம்.

இதற்குத் தேவைகணினிமொழியியல்மொழித்தொழில்நுட்பம் அடிப்படையில் தமிழ்மொழி அமைப்பைக் கையாளக்கூடிய மென்பொருள்களை ஆய்வு அடிப்படையில் உருவாக்குவதேயாகும்.இந்தப் பணியில் நாம் வளர்ச்சியடையும்போதுதான்மேற்குறிப்பிட்ட பயன்பாட்டுத் தமிழ் மென்பொருள்களை உருவாக்கமுடியும்.

தமிழக அரசு மேற்கொள்ளவேண்டியகணினித்தமிழ்வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் சில:

1. தமிழ் வளர்ச்சித் திட்டத்திற்கென ஓர் ஆணையம் அமைக்கப்படவேண்டும்தமிழை எதிர்கால நடைமுறைக்கு ஏற்றவகையில் வலுப்படுத்தும் ஆணையமாக இது இருக்கவேண்டும்.

2. திட்டமிட்டமுறையில்தமிழ்வளர்ச்சித்திட்டப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

3. அந்த ஆணையத்தின்கீழ்கணினித்தமிழ்வளர்ச்சிப் பிரிவு ஒன்று அமைக்கப்படவேண்டும்இப்பிரிவுகணினித்தமிழ்வளர்ச்சிக்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளவேண்டும்மின்-ஆளுகை,மின்கல்விமின்வணிகம்போன்ற பல முனைகளில் தமிழ் செயற்பட வழிவகுக்கவேண்டும்.

4. தமிழகத்தில் நுழைக்கப்படும் கணினிகள் , அலைபேசிகள் போன்ற மின்னணுக் கருவிகள் தமிழைப் புழங்கும் கருவிகளாக இருக்கவேண்டும். தமிழைப் புழங்கும் கருவிகளுக்கு விற்பனை வரிச் சலுகையும், தமிழைப் புழங்காத கருவிகளுக்குக் கூடுதல் விற்பனை வரியும் விதிக்கப்படவேண்டும். அதைபோல வணிகத்தில் எங்கெல்லாம் தமிழ் வழக்குமொழியாக (எடுத்துக்காட்டுநிறுவனங்கள், கடைகள், அங்காடிகள்) இருக்கிறதோ, அங்கெல்லாம் விற்பனை வரிச் சலுகை அளிக்கப்படவேண்டும். தமிழ்நாட்டில்  தமிழ்ப்படித்தோருக்கு வேலைவாய்ப்பு உறுதி என்ற நிலை உருவாகவேண்டும்.

5. C-DAC  போன்று ஒரு மொழித்தொழில்நுட்ப நிறுவனம் நிறுவப்பட்டு,தமிழ் மென்பொருள்களை உருவாக்கவேண்டும்.

6கணினித்தமிழுக்குமனிதவளங்களைப் பெருக்க,தமிழ்க்கணினிமொழியியல்ஆய்வு நிறுவனம் ஒன்று நிறுவப்படவேண்டும்.

7.பல்கலைக்கழகங்களில்கல்லூரிகளில் கணினிமொழியியல்,மொழித்தொழில்நுட்பப் படிப்புகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

8. பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் தமிழகத்தில் கல்விநிறுவனங்கள்வணிக நிறுவனங்கள் போன்றவற்றிற்குத் தேவையான மென்பொருள்களை அளிக்கும்போதுஅவையெல்லாம் தமிழ்வழியே பயன்படுத்தத் தேவையான அமைப்புகளோடு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்திஅதற்கு ஊக்கமளிக்கும்வகையில் சில சலுகைகளை அவற்றிற்கு அளிக்கலாம்.

மேற்கூறிய வகைகளில் தமிழை ஒருமின்னணுமொழியாகவளர்த்தெடுக்கவேண்டும்அதற்கான அனைத்துப் பணிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும்.

கணினிக்கேற்ற ஒரு மொழியாகத் தமிழை வளர்த்தெடுக்கத் தேவையான  மொழித்தொழில் நுட்பத்துறையின்அனைத்து வளர்ச்சிகளையும் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தல்வேண்டும்.

தமிழ் வளர்ச்சிக்கான – குறிப்பாகக் கணினித்தமிழ் வளர்ச்சிக்கான – மேற்கூறிய பணிகளைத் தமிழ்நாட்டு அரசு மேற்கொள்ளவேண்டும். இப்பணிகளை மேற்கொள்வதன்மூலம் தமிழ்மொழி வரலாற்றில் தனி முத்திரையைத் தமிழ்நாட்டு அரசு பதிக்கவேண்டும்.







தமிழ் மக்களே, தமிழ் ஆர்வலர்களே, ஆசிரியர்களே, ஆய்வாளர்களே, மாணவர்களே, அனைவரும் கணினித்தமிழ் வளர்ச்சியே எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை உணர்ந்து தமிழகமெங்கும் பள்ளிகளில் கல்லூரிகளில் கல்வி நிறுவனங்களில் பொது அரங்குகளில் பரப்புரை செய்தும் ஆய்வுகள் மேற்கொண்டும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடவும் அரசை வலியுறுத்தவும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


மேற்கூறிய நோக்கங்களை முன்னிறுத்தி 2012 திசம்பர் 15 ஆம் நாளன்று தமிழ் வளர்ச்சியில் கணினித்தமிழ் என்ற ஒரு முழக்கத்தை முன்வைக்கும் மக்கள் தழுவிய மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளைத் தெளிவுபடுத்திக்கொண்டு, அவற்றைத் தமிழ்நாட்டு அரசின் பார்வைக்குக் கொண்டுசெல்வதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.


Languages for which no adequate computer processing is beingdeveloped, risk gradually losing their place in the global Information Society, or even disappearing, together with the cultures they embody, to the detriment of one of humanity's great assets: its cultural diversity - Antonio Zampolli, Giovanni Battista Varile


தேவையான அளவிற்குக் கணினிச்செயல்பாடுகளைத் தங்களுக்கு உருவாக்கிக்கொள்ளாத மொழிகள் படிப்படியாகத் தகவல் தொழில்நுட்பச் சமுதாயத்தில் தங்களுக்குரிய இடத்தை இழந்துவிடும் நிலை ஏற்படும்மேலும் அவை தாங்கள் உள்ளடக்கியுள்ள பண்பாடுகளோடு சேர்ந்து மறையும் நிலையும் ஏற்படலாம்இது மாந்த இனத்தின் பண்பாடுகளில் வேற்றுமை என்ற மிகப் பெரும் சொத்துக்குத் தீங்கு இழைக்கக்கூடிய ஒன்றாகும்.

- Antonio Zampolli, Giovanni Battista Varile

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India